கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு, பஸ் நுழைவு வாயில், வெளியே வரும் பகுதி உள்ளிட்ட இடங்களில்தான் போலீஸார் உள்ளனர். காந்திசாலை, கச்சேரிசாலை, மணிகூண்டு பஸ்நிறுத்தம், துருகம்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீஸார் இருந்தால்தான் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த முடியும். ÷கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு அருகேதான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பஸ்நிலையம், நீதிமன்றம், வங்கிகள் அதிக அளவு உள்ளன. அதனால் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகின்றன. போக்குவரத்து நெரிசலின்போது ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் செல்ல, அவர்கள் படும் பாடு கொஞ்ச நஞ்சம் அல்ல.