இடிந்து விழும் நிலையில் சத்துணவு சமையலறை
ஸ்ரீபெரும்புதூர், ஆக.5 காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடிந்து விழும் நிலையில் உள்ள பழமையான சமயலறைக் கூடத்தை இடித்து விட்டு புதிதாகக் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வே


ஸ்ரீபெரும்புதூர், ஆக.5 காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடிந்து விழும் நிலையில் உள்ள பழமையான சமயலறைக் கூடத்தை இடித்து விட்டு புதிதாகக் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குன்றத்தூர் ஒன்றியம் சாலமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட நரியம்பாக்கம் கிராமத்தில் ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நரியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 33 மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். இப்பள்ளி அருகில் பள்ளியின் சத்துணவு சமையலறைக் கூடம் செயல்பட்டு வருகிறது.
இந்த சமையலறைக் கூடம் கடந்த 96-97-ம் ஆண்டு ஜவகர் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது. கட்டடம் கட்டி 15 வருடங்கள் ஆன நிலையில் பெரும்பாலான இடங்களில் விரிசல் விழுந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் தற்போது உள்ளது.
எனவே சிதிலமடைந்த சமையலறைக் கூடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நரியம்பாக்கம் தொடக்கப்பள்ளி வளாகத்தில் இடிந்து விழும்
நிலையில் உள்ள சத்துணவு சமையலறைக் கூடம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...