அபாய நிலையில் மலைப்பட்டு தரைப்பாலம்!
ஸ்ரீபெரும்புதூர் கரசங்கால் சாலையில், மலைப்பட்டு பகுதியில் உள்ள தரைப்பாலம் குண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. புதிய தரைப்பாலம் அமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பல மாதங்கள் ஆகியும் பணிகள் தொடங்காததால் வாகன ஓட்டுனர்கள் விபத்து அச்சத்தில், பழுதடைந்த தரைப்பாலத்தில் சென்று வருகின்றனர்.









