இங்கிருந்து, சென்னை,திருவள்ளூர், ஆவடி, பெரம்பூர், திருப்பதி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பாண்டிச்சேரி ஆகிய ஊர்களுக்கு அதிகமானவர்கள் சென்று வருகின்றனர். ஆனால், இத்தனை பேர் வந்து செல்லும் திருத்தணி ரயில் நிலையத்தில் மொத்தம் 3 டிக்கெட் கவுன்ட்டர்களே உள்ளன. இதில் இரண்டு டிக்கெட் கவுன்ட்டர்கள் மட்டுமே செயல்படுகின்றன. இந்த கவுன்டர்களில்தான், வெளியூர்களுக்கு செல்ல டிக்கெட்டும், ரயில் பயணிகளின் மாதாந்திர சீசன் டிக்கெட்டும் வழங்கப்படுகின்றன. அதிகாலை 5 முதல் காலை 7.30 வரை மற்றும் மதிய நேரங்களிலும், சென்னை சென்ட்ரல் வரை செல்லும் மின்சார ரயிலில் பயணம் செய்வதற்கு டிக்கெட் பெற ஏராளமானோர் வருகின்றனர்.