வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

சினிமா சட்டம் தொடர்பாக ஆராய குழு அமைப்பு: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

 தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது போன்ற சினிமா சட்டத்தில் எழும் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆராய

Updated On :2 மார்ச் 2013, 4:44 am IST

 தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது போன்ற சினிமா சட்டத்தில் எழும் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆராய பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

துப்பாக்கி படத்துக்கு "யு' தணிக்கைச் சான்றிதழ் வழங்கியதை எதிர்த்து இந்திய தேசிய லீக் கட்சியின் அப்துல் ரஹீம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி ஆர்.பானுமதி, நீதிபதி கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன் இந்தத் தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மத்திய தணிக்கைக் குழுவின் செயல்பாடுகள், அதிகாரங்கள் போன்றவை தொடர்பாகவும், அவற்றை இப்போதைய நடைமுறைக்கு ஏற்றவகையில் மாற்றவும் இந்தக் குழு பரிந்துரை செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.