விருத்தாசலம் தனியார் அறிவியல் கல்லூரியில் "தானே புயலும், நீலகிரி நிலச்சரிவும்' எனும் தலைப்பில் வெள்ளிக்கிழமை ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.
÷விருத்தாசலத்தை அடுத்த எருமனூரில் உள்ள தனியார் அறிவியல் கல்லூரியில் ஈரநிலம் அறக்கட்டளை சார்பில் "தானே புயலும்- நீலகிரி நிலச்சரிவும்' எனும் தலைப்பில் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.
÷கண்காட்சியில் கடந்த 1 ஆண்டுக்கு முன் கடலூர் மாவட்ட விவசாயிகளை முழுமையாக பாதித்த தானே புயலின் தாக்கம் குறித்த ஓவியங்களும், நீலகிரியில் நடந்த நிலச்சரிவின் அபாயங்களையும் விளக்கும் வகையில் ஓவியங்கள் இடம் பெற்றன.
÷மேலும், காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் ஆபத்துகள். இயற்கை வளங்களை சுரண்டுவதால் உருவாகும் அபாயங்களை சித்தரிக்கும் ஓவியங்கள் காட்சியில் இடம் பெற்றிருந்தன.
÷ஓவியக் காட்சி குறித்து ஈரநிலம் தொண்டு அமைப்பின் தலைவரும், ஓவியருமான ந.தமிழரசன் தெரிவித்தது:
÷தமிழகத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உலுக்கிய மிகப்பெரும் நிகழ்வுகள் "தானே புயலும், நீலகிரி நிலச்சரிவும்' ஆகும். இவை ஏற்படக் காரணம் என்ன என்பதை விளக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு ஓவியப் பயணத்தை நடத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
÷எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தி மாணவர்கள், இளைஞர்கள்ளிடம் இருப்பதால் இந்த விழிப்புணர்வை அவர்களிடம் தொடங்கினால் சிறப்பாக இருக்கும் என கருதியதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் மாவட்டத்துக்கு ஒரு கல்லூரியைத் தேர்ந்தெடுத்து, அந்த மாணவர்களிடத்தில் ஓவியக் கண்காட்சி நடத்தப்பட்டது.
÷கடந்த ஜனவரி 2-ம் தேதி சென்னையில் தொடங்கிய கண்காட்சி 32 மாவட்டங்களை கடந்து வரும் மார்ச் 4-ம் தேதி புதுச்சேரியில் முடிவடைகிறது.
÷தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இதுவரை நடந்த ஓவியக் கண்காட்சியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கல்லூரி இளைஞர்கள் கலந்து கொண்டு, கருத்துகளை தெரிந்து கொண்டனர்.
÷மேலும், இக்கண்காட்சி தங்களுக்கு மிகவும் பயன்படுவதாகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குவதாக தெரிவித்தனர் எனக் கூறினார்.
÷எருமனூர் சி.எஸ்.எம். அறிவியல் கல்லூரி மாணவர்கள் தெரிவித்தது: இந்த கண்காட்சியின் மூலம் நாங்கள் பல உண்மைகளை தெரிந்து கொண்டோம். மரங்களை வெட்டுவதால் உண்டாகும் தீமைகள், நீர்நிலைகள், வயல்கள் ஆகியவற்றை வீட்டுமனைகளாக மாற்றியதால் ஏற்பட்டுள்ள விளைவுகளையும் தெரிந்து கொண்டோம் எனத் தெரிவித்தனர்.
÷இயற்கையைப் பாதுகாக்க தன்னந்தனி மனிதராய் தமிழகம் முழுவதும் ஓவியங்களோடு பயணிக்கும் ஓவியர் தமிழரசனின் தூரிகைப் பயணம் பாராட்டுக்குரியது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?

சாம்சங் போராட்டத்தில் இ. முத்துக்குமார் பொய்வழக்குகளில் தொடர்ந்து சிறையில் அடைப்பு! சிபிஐஎம் கண்டனம்!!

விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து! ஏன்?

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

