தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

இலங்கையின் பழிச் சொல்லுக்கு காங்கிரஸ் கூட்டணி அரசு பதிலளிக்க வேண்டும்

இலங்கையில் தமிழர்கள் மீது நடைபெற்ற யுத்தத்துக்கு, இந்தியா துணை நின்றதாகக் கூறப்படும் பழிச் சொல்லுக்கு காங்கிரஸ் அரசு பதிலளிக்க வேண்டும் என்று, பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

News image
Updated On :12 ஏப்ரல் 2013, 2:19 am IST

இலங்கையில் தமிழர்கள் மீது நடைபெற்ற யுத்தத்துக்கு, இந்தியா துணை நின்றதாகக் கூறப்படும் பழிச் சொல்லுக்கு காங்கிரஸ் அரசு பதிலளிக்க வேண்டும் என்று, பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

தேனியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

திண்டுக்கல், தஞ்சை நகராட்சிகளை போல நாகர்கோவில் நகராட்சியையும் மாநகராட்சியாக அரசு தரம் உயர்த்த வேண்டும்.

மத்திய அரசு சி.பி.ஐ. அமைப்பை தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தி வருகிறது. கூட்டணி மற்றும் அமைச்சரவையில் இருந்து விலகுவதாக திமுக கடிதம் கொடுத்த அடுத்த நாளே, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. சோதனை மற்றும் விசாரணை நடத்தியது. ஆட்சியாளர்களின் சுயலாபத்துக்கு சி.பி.ஐ. அமைப்பை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

கேரளத்தில் தென்னை விவசாய மேம்பாட்டுக்கு மத்திய அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியாவில் தென்னை உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கும் தமிழகத்தில், தற்போது வறட்சி மற்றும் நோய்த் தாக்குதலால் தென்னை விவசாயம் நலிவடைந்துள்ளது. தென்னை விவசாய மேம்பாட்டுக்கு கேரளத்துக்கு ஒதுக்கீடு செய்துள்ளதை விட இரண்டு மடங்கு நிதியை தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல் அதிமுக கட்சித் தேர்தல் போல நடைபெறுகிறது. சின்னமனூரில் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு மனுத் தாக்கல் செய்யச் சென்ற நகர பாஜக தலைவர் பரமசிவம், சின்னமனூர் அதிமுக நகர்மன்றத் தலைவர் சுரேஷ் என்பவரால் மிரட்டப்பட்டுள்ளார். தொழில் ரீதியில் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் மீது நடைபெற்ற யுத்தத்துக்கு இந்தியா துணை நின்றதாகவும், இந்தியாவில் மக்களவைத் தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் யுத்தத்தை நடத்துமாறு அரசு கேட்டுக் கொண்டதாகவும், இலங்கை அதிபர் ராஜபட்ச கூறியுள்ள பழிச் சொல்லுக்கு காங்கிரஸ் அரசு பதிலளிக்க வேண்டும்.

இலங்கை அரசைக் கட்டுப்படுத்தக் கூடிய வல்லமையான, துணிச்சலான அரசு அமைந்தால்தான் இலங்கை தமிழர் பிரச்னை முடிவுக்கு வரும். தமிழக மீனவர்கள் பாதுகாக்கப்படுவர்.

இந்தியாவிலும், இலங்கையிலும் மட்டுமின்றி, உலகளவில் தமிழர்களின் நலன் காக்கும் அரசாக பாஜக அரசு அமையும். வரும் மக்களவைத் தேர்தலில் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, காங்கிரஸ் கட்சியைப் புறக்கணிக்க வேண்டும் என்றார் அவர்.

பேட்டியின்போது, பாஜக மாநிலத் துணைத் தலைவர் சுரேந்திரன், செயற்குழு உறுப்பினர் லோகன்துரை, மாவட்டத் தலைவர் ராஜபாண்டி, தேனி நகரத் தலைவர் குமரேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.