தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

பாலியல் குற்றங்கள் பற்றி வாய் திறக்காத முதல்வர்! திமுக எம்எல்ஏவின் கேள்விக்கு எதிர்ப்பு!

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கேள்வி எழுப்புவது பற்றி...

News image

கோப்புப் படம் - DIPR

Updated On :19 ஜூன் 2026, 2:14 pm IST

தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்த திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர், 'என்ன நடந்தாலும் நான் வாய் திறக்கமாட்டேன் என சரித்திர புரட்சியை ஏற்படுத்தி வருபவர் முதல்வர் விஜய்' என்று பேசினார்.

இதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளிக்கையில், "எங்கள் முதல்வர், கொளத்தூரில் பேசியதால் என்ன தேர்தல் முடிவு வந்தது என அனைவருக்கும் தெரியும். என்ன பேச வேண்டும் எப்போது பேச வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்.

முதல்வரை கொச்சைப்படுத்தும் விதமாக திமுக எம்எல்ஏ ஆஸ்டின் பேசி வருகிறார்" என்றார்.

ஆனால், உள்துறையை நிர்வகிக்கும் முதல்வர் விஜய், எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

இதேபோன்று மகளிருக்கு ரூ. 2,500, முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என தவெகவின் வாக்குறுதிகள் குறித்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் முதல்வரோ, துறை சார்ந்த அமைச்சர்களோ இதுபற்றி எதுவும் பதிலளிக்கவில்லை. மாறாக, அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா பதிலளித்து வருகின்றனர்.

"தற்போது ஆளுநர் உரை குறித்து மட்டுமே பேரவை உறுப்பினர்கள் பேச வேண்டும். விவாதத்தை திசைதிருப்ப வேண்டாம்" என்றும் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

திமுக எம்எல்ஏ ஆஸ்டினை பேச அனுமதிக்காததால் தவெக - எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Summary

Chief Minister remains silent on sexual crimes: Objection raised to DMK MLA question

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.