கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா மையத்துக்கு வனத் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வனத் துறை அமைச்சர் கே.டி. பச்சைமால் தெரிவித்தார்.
பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற வனத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் ஜி. பீம்ராவ் (மதுரவாயல்), கே. பாலகிருஷ்ணன் (சிதம்பரம்), டி. ராமச்சந்திரன் (தளி) ஆகியோர், கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டடங்களை கட்டி வரும் ஈஷா யோக மையம் உள்ளிட்ட அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அதற்குப் பதிலளித்து அமைச்சர் கே.டி. பச்சைமால் பேசியது: கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா யோக மையம் வனத்துறையிடம் அனுமதி பெற்று சாலை அமைத்துள்ளது. வனத் துறைக்கு உள்பட்ட பகுதிகளில் கட்டடங்கள் கட்ட மலைப்பகுதி பாதுகாப்பு குழுமத்திடம் அனுமதி பெற வேண்டும். புதிய கட்டடங்கள் கட்ட இந்தக் குழுமத்திடம் ஈஷா மையம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது. ஆனால், அனுமதி கிடைக்கும் முன்பே கட்டடங்கள் அங்கு கட்டப்பட்டு வருகின்றன. எனவே, இது குறித்து ஈஷா யோக மையத்துக்கு வனத் துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துறையூரில் அனைத்து மகளிா் காவல் நிலையம்: பொதுமக்களின் எதிா்பாா்ப்பு நிறைவேறுமா?
மக்களோடு மக்களாக பணியாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!

அரசியல் என்பது சாலை வலம் வருவதல்ல; மக்களோடு மக்களாக களத்தில் நிற்பது! - அண்ணாமலை

கமலாலயக்குளத்தின் புனிதத் தன்மை பாதுகாக்கப்படுமா?
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

