நாமக்கல்லில் கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடும் முயற்சியில், பூட்டை உடைக்க முடியாமல் போனதால், ரூ.7.50 கோடி நகை, பணம் தப்பின.
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள நல்லிபாளையத்தில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கமும், அதன் வளாகத்திலேயே நியாய விலைக் கடையும் அமைந்துள்ளன. இந்தக் கடன் சங்கத்தின் பின்புறம் பெரியய்யம்பாளையத்தில் நிலத் தரகர் கந்தசாமி (60), மனைவி கண்ணம்மாள் (50), மகள் நீலாம்பிகை (20) ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், வெளியில் சென்றிருந்த அவர்கள் வியாழக்கிழமை காலை வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்ததாம். பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரம் திருடப்பட்டது தெரிய வந்தது.
தகவலறிந்து வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மோப்ப நாய் அருகேயுள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்துக்கும், அதன் வளாகத்திலுள்ள நியாய விலைக் கடைக்கும் சென்று திரும்பியது. இதையடுத்து, போலீஸார் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். மர்ம நபர்கள் நியாய விலைக் கடையின் பூட்டை உடைத்து ரூ.500 திருடியது தெரிய வந்தது. பிறகு, அருகிலிருந்த கூட்டுறவுக் கடன் சங்கத்தின் பூட்டை உடைத்து திருட முயற்சித்துள்ளதும் தெரிய வந்தது. ஆனாலும், பூட்டை உடைக்க முடியாததால் மர்மக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது. இதனால், கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்த ரூ.7.5 கோடி மதிப்பிலான நகைகள், பணம் தப்பியது. போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் மீது தாக்குதல்!

லெபனான், சிரியா, காஸாவிலுள்ள படைகளைத் திரும்பப் பெறமாட்டோம்: இஸ்ரேல்

வெள்ளோட்டம் வெல்லட்டும்

காலடியின் தடங்கள்
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி


