ஆண்டிபட்டி அருகே மறவபட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் விநோதமான முறையில் துடைப்பத்தால் அடிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மறவபட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழா கடந்த திங்கள்கிழமை துவங்கியது. முதல் நாள் பொங்கல் வழிபாடும், மறுநாள் முளைப்பாரி ஊர்வலமும் நடைபெற்றது. மூன்றாம் நாளான புதன்கிழமை அந்த கிராமத்தில் உள்ள மாமன், மைத்துனர் முறையில் உள்ளவர்கள் மீது துடைப்பத்தால் அடிக்கும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் போது, தெருவில் உள்ள சாக்கடையில் புரண்டும், சகதியில் துடைப்பத்தை தோய்த்தும் அடித்துக் கொண்டனர். மேலும் சிலர், சாக்கடையில் படுத்துக்கொண்டு தங்களது உறவினர்களிடம் துடைப்பத்தால் அடிவாங்கிக் கொண்டனர். இது குறித்து, இக்கிராமத்தைச் சேர்ந்தவர் கூறுகையில், இத்திருவிழாவில் இப்பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர். இதில், துடைப்பத்தால் அடித்துக் கொள்வதால் அவர்களுக்கிடையே மீண்டும் உறவு வளரும். மேலும், கண் திருஷ்டி மற்றும் பில்லி, சூனியம் நீங்கி தோஷங்கள் விலகும். இதில், மாமன், மைத்துனர் இடையே மட்டும் அடித்துக் கொள்வதாகக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்

தனியாா்மயமாக்கல் திட்டத்துக்கு அரசு புத்துயிா் அளிக்க வேண்டும்: நீதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவா்அரவிந்த் பனகாரியா

முனம்பம் நில விவகாரம்: கேரள வக்ஃப் வாரியத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்






