ஆம்பூரில் திங்கள்கிழமை மாலை பெய்த கன மழைக்கு வாழை பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
ஆம்பூரில் திங்கள்கிழமை மாலை இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், பல இடங்களில் ஆஸ்பெட்டாஸ் கூரைகள் காற்றில் பறந்து சென்று கீழே விழுந்து உடைந்தன.
தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன.
ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியில் அறிவழகன் என்பவரின் வாழைத்தோப்பு சூறாவளி காற்றால் சேதமடைந்தது. பல வாழை மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதே ஆம்பூரின் சுற்றுப்புறத்தில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







