திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அக்கட்சியின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஏப்ரல் 30 முதல் தமிழகம் முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.
இந்நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மே 1-ஆம் தேதி அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக செங்கத்தை அடுத்த அரட்டவாடி கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் (23) என்பவரை செங்கம் காவல் நிலைய போலீஸôர் கைது செய்தனர். இதேபோல, மே 5-ஆம் தேதி போளூர் அருகே பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக எழுவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் சகாதி (36) என்பவர் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் விஜய் பிங்ளேவுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.முத்தரசி பரிந்துரை செய்தார்.
ஆட்சியர் உத்தரவின்பேரில், செவ்வாய்க்கிழமை இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இது குறித்த தகவல், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபாகரன், சகாதி ஆகியோருக்குத் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... பஹல்காமின் இருளும் ஒளியும்!

நாளை வெள்ளியங்கிரி மலை, கோவை குற்றாலம் செல்ல வனத் துறை தடை!

‘பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது’... பஹல்காம் தாக்குதல் நாளில் பிரதமர் மோடி!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

