மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கச்சத் தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

கச்சத் தீவு ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

News image
Updated On :11 ஜூன் 2013, 8:08 pm

கச்சத் தீவு ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு செவ்வாய்க்கிழமை அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடலில் மீன் பிடிக்கச் செல்லும் அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. பாக் ஜலசந்தியை கடந்து செல்லக் கூடாது என தமிழக மீனவர்கள் மிரட்டப்படுவதோடு அவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கை அரசுடன் பேசி நமது மீனவர்களின் பிரச்னையைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1951-இல் நேபாளத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு விரும்புகிறது. அதுபோல இலங்கையுடன் 1974-இல் ஏற்பட்ட கச்சத் தீவு ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். அதன் மூலம் தமிழக மீனவர்களைக் காப்பாற்ற வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.