நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

சிறுநீரக விற்பனை வழக்கு: சிபிசிஐடி வசம் ஒப்படைப்பு

தருமபுரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக சிறுநீரக விற்பனையில் ஈடுபட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.

Updated On :22 ஜூன் 2013, 3:54 am IST

தருமபுரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக சிறுநீரக விற்பனையில் ஈடுபட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக சிறுநீரக விற்பனையில் ஈடுபட்டதாக, சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த இடைத்தரகர் அய்யாவு (51), கத்தேரி கிராமத்தைச் சேர்ந்த பி.வடிவேல் (46), தருமபுரி மாவட்டம், மணியம்பாடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் (40), நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், பெரியமணலியைச் சேர்ந்த சீனிவாசன் (35), குமாரபாளையத்தைச் சேர்ந்த என்.ஷாஜகான் (45), பள்ளிபாளையத்தைச் சேர்ந்த வேலுமணி (எ) சித்ரா (34), ஈரோடு மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள டி.ஜி.புதூரைச் சேர்ந்த சிகாமணி (53), மருத்துவர் கணேசன், சேலம் நீதிமன்றத்தில் ஆஜரான கார் ஓட்டுநர் ஹரி பாஸ்கர் (35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை தருமபுரி மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைக்குமாறு தமிழகக் காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து தருமபுரி மாவட்டக் காவல் துறைக்கு உத்தரவு வந்துள்ளது.

அதன்படி, வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஸ்ரா கர்க் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவர் கணேசனை போலீஸார் தங்களது காவலில் எடுத்து விசாரித்த பிறகு, வியாழக்கிழமையே பென்னாகரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

ஜாமீன் மனு: மருத்துவரின் ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, மருத்துவர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் இந்த வழக்கில் மருத்துவர் கணேசனுக்கு நேரடித் தொடர்பு ஏதுமில்லை. எனவே, அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் எனக் கோரினர். இதற்கு அரசுத் தரப்பு வழக்குரைஞர் எதிர்ப்புத் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஸ்ரீராம், ஜாமீன் மனு மீது திங்கள்கிழமை உத்தரவிடுவதாகக் கூறி மனுவை ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.