நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே வெள்ளிக்கிழமை பாலத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நரசிம்மர் கோயிலைச் சேர்ந்த மனோகரன் மகன் பாலாஜி (40). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சிவஞானம் மகன் சிவசங்கர் (42) ஆகிய இருவரும் திருத்தணி முருகன் கோயில் பகுதியில் பஞ்சாமிர்தக் கடை நடத்தி வருகின்றனர்.
இவர்களுடன், திருத்தணி நரசிம்மர் கோயில் தெருவைச் சேர்ந்த சம்பத் (55) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (50) ஆகிய நான்கு பேரும், வெல்லம் வாங்குவதற்காக காரில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்திற்கு வந்தனர்.
சென்னை ஆவடி களிமேடு பகுதியைச் சேர்ந்த ராஜன் மகன் பாலாஜி (40) காரை ஓட்டி வந்தார்.
வெள்ளிக்கிழமை நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் சுங்கச் சாவடி அருகேயுள்ள புலவர்பாளையம் பாலத்தில் கார் வந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவர் மீது மோதிக் கவிழ்ந்தது. இதில், காரில் இருந்த 5 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் தேசிய நெடுஞ்சாலை அவசர ஊர்தி மூலம் நாமக்கல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு கார் ஓட்டுநர் பாலாஜியும், திருத்தணியைச் சேர்ந்த சம்பத்தும் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மற்றொரு பாலாஜி, ஆனந்தன், சிவசங்கர் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


