நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பாலத்தில் கார் மோதி இருவர் சாவு

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே வெள்ளிக்கிழமை பாலத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

News image
Updated On :22 ஜூன் 2013, 3:50 am IST

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே வெள்ளிக்கிழமை பாலத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நரசிம்மர் கோயிலைச் சேர்ந்த மனோகரன் மகன் பாலாஜி (40). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சிவஞானம் மகன் சிவசங்கர் (42) ஆகிய இருவரும் திருத்தணி முருகன் கோயில் பகுதியில் பஞ்சாமிர்தக் கடை நடத்தி வருகின்றனர்.

இவர்களுடன், திருத்தணி நரசிம்மர் கோயில் தெருவைச் சேர்ந்த சம்பத் (55) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (50) ஆகிய நான்கு பேரும், வெல்லம் வாங்குவதற்காக காரில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்திற்கு வந்தனர்.

சென்னை ஆவடி களிமேடு பகுதியைச் சேர்ந்த ராஜன் மகன் பாலாஜி (40) காரை ஓட்டி வந்தார்.

வெள்ளிக்கிழமை நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் சுங்கச் சாவடி அருகேயுள்ள புலவர்பாளையம் பாலத்தில் கார் வந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவர் மீது மோதிக் கவிழ்ந்தது. இதில், காரில் இருந்த 5 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் தேசிய நெடுஞ்சாலை அவசர ஊர்தி மூலம் நாமக்கல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு கார் ஓட்டுநர் பாலாஜியும், திருத்தணியைச் சேர்ந்த சம்பத்தும் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மற்றொரு பாலாஜி, ஆனந்தன், சிவசங்கர் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.