நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

முதல்வரை அவதூறாகப் பேசியதாக திமுக மகளிர் தொண்டரணி செயலர் கைது

முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக திமுக மாநில மகளிர் தொண்டரணி செயலர் காரல்மார்க்ஸ் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :22 ஜூன் 2013, 3:57 am IST

முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக திமுக மாநில மகளிர் தொண்டரணி செயலர் காரல்மார்க்ஸ் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் குறிஞ்சி தெருவைச் சேர்ந்தவர் காரல்மார்க்ஸ். இவர் திமுக மாநில மகளிர் தொண்டரணி செயலராக உள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மே 19-ஆம் தேதி நடைபெற்ற திமுக தலைமை நிலையப் பேச்சாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற காரல்மார்க்ஸ் தமிழக அரசையும், முதல்வர் ஜெயலலிதாவையும் அவதூறாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசினாராம்.

இதுதொடர்பாக, காரல்மார்க்ஸ் மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் வழக்குரைஞர் செல்வக்குமார் புகார் செய்தார். பின்னர், இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்திலும் செல்வக்குமார் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது விசாரணை நடத்தும்படி, தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, காரல்மார்க்ஸ் மீது 124 (ஏ), 506 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, தேனாம்பேட்டை காவல் உதவி ஆணையர் சிவ. பாஸ்கர் தலைமையில் போலீஸார் வெள்ளிக்கிழமை காரல்மார்க்ஸ் வீட்டுக்குச் சென்று அவரைக் கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.