நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பாமக புறக்கணிப்பு: வாக்கு மதிப்பில் பெரிய அளவில் மாற்றமிருக்காது

பாமக புறக்கணிப்பால் வாக்கு மதிப்பால் பெரிய அளவில் மாற்றமிருக்காது என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்கள் காலியாகின்றன.

Updated On :22 ஜூன் 2013, 6:15 am IST

பாமக புறக்கணிப்பால் வாக்கு மதிப்பால் பெரிய அளவில் மாற்றமிருக்காது என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்கள் காலியாகின்றன.

இந்தத் தேர்தலில் 234 எம்.எல்.ஏ.க்களும் வாக்காளர்கள் ஆவர். காலியாகும் 6 இடங்களுடன் ஒன்றைக் கூட்டினால் ஏழு என்ற மதிப்பு வரும். 234ஐ 7 ஆல் வகுக்கும் போது 33.428 என்ற மதிப்பு வரும். இதனுடன் ஒன்றைக் கூட்டினால் வரும் முழு மதிப்பு 34 ஆகும்.

தமிழக சட்டப் பேரவையில் பாமகவுக்கு 3 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்கள் மாநிலங்களவைத் தேர்தலை புறக்கணிக்கும் போது மொத்தமுள்ள 234 எம்.எல்.ஏ.க்களில் வாக்காளர்களின் எண்ணிக்கை 231 ஆகக் குறையும்.

இந்த எண்ணிக்கையை ஏழால் வகுக்கும் போது, 33.01 என்ற மதிப்பு கிடைக்கும். இந்த மதிப்புடன் ஒன்றைக் கூட்டும் போது கிடைக்கும் முழுமையான மதிப்பு 34 ஆகும். எனவே, பாமக புறக்கணிப்பால் மாநிலங்களவைத் தேர்தல் வாக்கு மதிப்பில் பெரிய அளவுக்கு மாற்றம் ஏதும் இருக்காது.

மாநிலங்களவைத் தேர்தல் வாக்கெடுப்பின் போது எத்தனை வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்பதைப் பொருத்தே வெற்றிக்கான இலக்கு மதிப்பு நிர்ணயிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாமகவின் முடிவு திடீரென மாறி, வாக்கெடுப்பில் பங்கேற்றாலும் வாக்கு மதிப்பு 34 என்ற அளவிலேயே இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.