திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நாளை இரவுமுதல் வேலைநிறுத்தம்: ஏ.ஐ.டி.யூ.சி. அறிவிப்பு

நெய்வேலி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கைவிடக் கோரி

Updated On :1 ஜூலை 2013, 9:11 pm

நெய்வேலி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கைவிடக் கோரி புதன்கிழமை இரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டச் செயலர் எம்.சேகர் தெரிவித்தார்.

பண்ருட்டியில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: நெய்வேலி நிறுவன பங்கு விற்பனையை கைவிடக் கோரி புதன்கிழமை இரவு முதல் போராட்டம் தொடங்க உள்ளது.

ஏ.ஐ.டி.யூ.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேர் போராட்டத்தில் பங்கேற்பர்.

நெய்வேலி புதுக்குப்பம் ரவுண்டானாவில் இருந்து பேரணி புறப்பட்டு 8 ரோடில் முடிவடைந்ததும் போராட்டம் அறிவிக்கப்படும்.

மாநிலத் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சுப்புராயன், பொதுச்செயலர் டி.எம்.மூர்த்தி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகர்களில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கடலூரில் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் மாரியப்பன் தலைமை வகிப்பார்.

இதில் வங்கி, தொலைத்தொடர்பு துறை, ஆசிரியர்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்பர் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.