கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாக ஈரான் அரசால் சிறை பிடிக்கப்பட்டுள்ள திருப்பாலைக்குடி உள்பட 4 கிராமங்களைச் சேர்ந்த 9 மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியை அமைச்சர்கள் ஜெயபால், சுந்தர்ராஜ் ஆகியோர் வழங்கினர்.
திருவாடானை தாலுகா, திருப்பாலைக்குடியைச் சேர்ந்த காளிகண்ணதாசன், மாயகிருஷ்ணன், காளியப்பன், உமாசெல்வம், முள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த முத்து தருமையா, மாயாண்டி, காரங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜெயராஜ், மோர்பண்ணை கிராமத்தை சேர்ந்த ராஜகருப்பையா, சாய்பு ஆகியோர் ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடி தொழில் செய்வதற்காக கடந்த டிசம்பர் மாதம் சவுதி அரேபியாவிற்கு சென்றனர்.
இவர்கள் சவுதி அரேபியாவில் மீன்பிடிக்கும்போது கடல் எல்லையைத் தாண்டியதாக ஈரான் அரசு சிறை பிடித்துள்ளது. இவர்களை மீட்க உதவுமாறு அவர்களது குடும்பத்தினர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நந்தகுமாரிடம் கோரிக்கை விடுத்தனர். இதை முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு ஆட்சியர் கொண்டு சென்றார்.
இந் நிலையில், வறுமையில் வாடும் மீனவக் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
இதன்படி மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால், கைத்தறித் துறை அமைச்சர் சுந்தர்ராஜ் ஆகியோர் வியாழக்கிழமை திருப்பாலைக்குடி சென்று காளிகண்ணதாசனின் தந்தை கருப்பையா, மாயகிருஷ்ணனின் மனைவி சுதாமேரி, காளியப்பனின் மனைவி தேவகி, உமாசெல்வத்தின் தாய் முத்து ஆகியோரிடம் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.
பின் மோர்பண்ணை கிராமத்துக்குச் சென்று ராஜகருப்பையாவின் தாய் ரெத்தினம், சாய்புவின் மனைவி தேவகி ஆகியோரிடமும், முள்ளிமுனை கிராமத்துக்குச் சென்று முத்து தருமையாவின் தாயாரிடமும், மாயாண்டியின் தாய் கனகவள்ளியிடமும், காரங்காடு சென்று ஜெயராஜ் மனைவி சூசைமேரி ஆகியோரிடமும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இத்தாலி வரைக்கும் சென்ற லக்ஷ்மி அம்மாள், நரோடா ஆடியோ..! வைரலாகும் ஜுவென்டஸ் அணியின் ரீல்ஸ்!

விஜய் பிறந்த நாள் விழாவில்...

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரயில்வேயில் 6,565 டெக்னீசியன் பணிகள்!

தமிழ்நாட்டில் இன்று 18, நாளை 5 மாவட்டங்களில் கனமழை!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



