தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. புளியங்குடி அருகே இடி தாக்கியதில் பெண் ஒருவர் இறந்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து. இந்நிலையில், கடந்த இரு தினங்களாக மாலை வேளையில் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது மிதமான மழையும் பெய்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலையில் திடீரென தட்பவெப்ப நிலை மாறி பலத்த மழை பெய்யத் தொடங்கியது.
தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, கடையநல்லூர் பகுதிகளில் இடி, மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக தென்காசி, மேலகரம் பகுதியில் இரவில் மின்தடை ஏற்பட்டது.
பெண் பலி: புளியங்குடி வேட்டரம்பட்டி அருகே கீழ திருவேட்டநல்லூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சாமி, விவசாயத் தொழிலாளி. இவருடைய மனைவி குமரம்மாள் (54).
ஞாயிற்றுக்கிழமை மாலையில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்துகொண்டிருந்தபோது, வீட்டுக்கு வாசலில் நின்றுகொண்டிருந்த குமரம்மாள், இடி தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

விடுதி அறையில் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை?

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மூத்த குடிமக்கள் வாக்களிக்க ஏதுவாக இலவச பேருந்து வசதி ஏற்பாடு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

