ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

"திருநள்ளாறு கோவிலுக்கு ரூ. 50 லட்சத்தில் ஸ்கேனர் கருவி'

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு வருவோரின் பைகளை சோதனை செய்ய ரூ.50 லட்சத்தில் ஸ்கேனர் கருவி வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On :11 செப்டம்பர் 2013, 7:21 pm

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு வருவோரின் பைகளை சோதனை செய்ய ரூ.50 லட்சத்தில் ஸ்கேனர் கருவி வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கோவில் நிர்வாக அலுவலர் ஏ. ராஜராஜன்வீராசாமி புதன்கிழமை கூறியது:

காவல் துறையின் ஆலோசனைப்படி, கோவிலுக்கு வரும் பக்தர்களின் பைகளை சோதனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பக்தர்களின் பைகளை ஸ்கேன் செய்து கோவிலுக்குள் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு அரசின் அனுமதி பெறப்பட்டது.

இதற்காக, ரூ.50 லட்சத்தில் 3 நவீன ஸ்கேனர் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளது. அரசின் இறுதி ஒப்புதல் கிடைத்தவுடன் ஒரு மாதத்தில் ஸ்கேனர் வரவழைக்கப்படும். இதற்காக கோவில் ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து, காவல் துறையின் ஒத்துழைப்புடன் சோதனை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.