இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

தில்லி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க ரயிலில் புறப்பட்ட விவசாயிகள்

நதிகள் இணைப்பை வலியுறுத்தி, தில்லியில் செப்டம்பர் 13-ஆம் தேதி, பாரதிய கிசான் சங்கம் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக, திருச்சியிலிருந்து 600 விவசாயிகள் ரயில் மூலம் புதன்கிழமை தில்லி புறப்பட்டனர்.

News image
Updated On :12 செப்டம்பர் 2013, 1:52 am IST

நதிகள் இணைப்பை வலியுறுத்தி, தில்லியில் செப்டம்பர் 13-ஆம் தேதி, பாரதிய கிசான் சங்கம் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக, திருச்சியிலிருந்து 600 விவசாயிகள் ரயில் மூலம் புதன்கிழமை தில்லி புறப்பட்டனர்.

நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்க வேண்டும், விவசாய விளைபொருள்களுக்கு கட்டுபடியான விலையை நிர்ணயம் செய்து தராததால் நஷ்டமடைந்துள்ள விவசாயிகளுக்கு, அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பாரதிய கிசான் சங்கம் சார்பில், செப்டம்பர் 13-ஆம் தேதி, தில்லி ராம்லீலா மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க, திருச்சியிலிருந்து அச்சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் வழக்குரைஞர் பொ.அய்யாக்கண்ணு தலைமையில், 600 விவசாயிகள் பல்லவன் விரைவு ரயில் மூலம் புதன்கிழமை தில்லி புறப்பட்டனர். 6 பெட்டிகளில் செல்லும் இவர்கள், வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு தில்லி சென்றடைகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.