வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பெரியார் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 17-இல் மரியாதை

தந்தை பெரியாரின் 135-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மலர் தூவி முதல்வர் ஜெயலலிதா மரியாதை செலுத்துகிறார்.

Updated On :12 செப்டம்பர் 2013, 1:43 am IST

தந்தை பெரியாரின் 135-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மலர் தூவி முதல்வர் ஜெயலலிதா மரியாதை செலுத்துகிறார்.

இது குறித்து, அதிமுக தலைமைக் கழகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பெரியாரின் 135-ஆவது பிறந்த தினம் வரும் 17-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு முதல்வரும் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் பல்வேறு கிளை அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் என அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்சி வெளியிட்ட அறிவிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.