கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள துணை சுகாதார நிலையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள துணை செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், ஆரம்பசுகாதார நிலையங்களில்தான் பிரசவம் நடைபெறவேண்டும் என்ற கட்டாயப்படுத்துதலை கைவிடவேண்டும், மூடப்பட்ட துணை செவிலியர் பயிற்சி மையங்கள் அனைத்தும் உடனடியாக திறக்கப்பட வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் நியமனம் செய்யப்படவேண்டும், பெண் ஊழியர்கள் என்பதை கருத்தில் கொண்டு பணிப்பளு திணிப்பதையும், பணியில் மூத்தோர் ஊதிய முரண்பாடு, பதவி உயர்வு, ஊட்டச்சத்துப்பணியாளர்களின் பணிக்காலத்தை சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது.