நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

காலிப்பணியிடங்களை நிரப்ப கிராம சுகாதார செவிலியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

பழனி உடுமலை சாலையில் படையாட்சிகள் மடத்தில் தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.  கூட்டத்திற்கு மாநில பொது செயலாளர் பாப்பா

News image
Updated On :9 ஆகஸ்ட் 2014, 12:37 pm

என்.​ அங்​கு​பாபு

தமிழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பழனி உடுமலை சாலையில் படையாட்சிகள் மடத்தில் தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.  கூட்டத்திற்கு மாநில பொது செயலாளர் பாப்பா வரவேற்புரை நிகழ்த்தினார்.பழனி சுகாதார மாவட்ட தலைவர் விஜயசாமுண்டீஸ்வரி, செயலாளர் பத்மாவதி, பாண்டிதேவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில துணைத் தலைவர் அந்தோணியம்மாள், மாநில இணை செயலாளர் மரியச்செல்வம், மாநில பொருளாளர் மரியஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சங்கத்தின் மாநில தலைவர் நிர்மலா சிறப்பு அழைப்பாளராக கூட்டத்திற்கு தலைமை வகித்து தலைமை உரை நிகழ்த்தினார். கூட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து செவிலியர் சங்க நிர்வாகிகள் நூற்றுக்கணக்கில் பங்கேற்றனர். 

கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள துணை சுகாதார நிலையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள துணை செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், ஆரம்பசுகாதார நிலையங்களில்தான் பிரசவம் நடைபெறவேண்டும் என்ற கட்டாயப்படுத்துதலை கைவிடவேண்டும், மூடப்பட்ட துணை செவிலியர் பயிற்சி மையங்கள் அனைத்தும் உடனடியாக திறக்கப்பட வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் நியமனம் செய்யப்படவேண்டும், பெண் ஊழியர்கள் என்பதை கருத்தில் கொண்டு பணிப்பளு திணிப்பதையும், பணியில் மூத்தோர் ஊதிய முரண்பாடு, பதவி உயர்வு, ஊட்டச்சத்துப்பணியாளர்களின் பணிக்காலத்தை சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் ரெமா, இணைச் செயலாளர்கள் தனலட்சுமி, தேனமொழி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.