ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கிருஷ்ணன்கோவில் காவல் ஆய்வாளர் சி.சின்னப்பாண்டி காலமானார்

வியாழக்கிழமை இரவுப் பணிக்காக தாணிப்பாறை சதுரகிரி மலைக்குச் சென்ற அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் மதுரை

News image
Updated On :17 ஆகஸ்ட் 2014, 11:51 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கோட்டம், கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சி.சின்னப்பாண்டி (54) (படம்) சனிக்கிழமை இரவு காலமானார்.

வியாழக்கிழமை இரவுப் பணிக்காக தாணிப்பாறை சதுரகிரி மலைக்குச் சென்ற அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தி்ல் 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் அவருக்கு மனைவியும் மூன்னறை வயதில் பெண் குழந்தையும் உண்டு.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் உள்பட போலீஸார் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

இவரது இறுதிச் சடங்கு திண்டுக்கல் மாவட்டம், வீருவீடு அருகேயுள்ள வத்தல்பட்டியில் 21 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.