அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சிதம்பரத்தில் பூக்கடை தொழிலாளர் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கீரனூரைச் சேர்ந்தவர் சிவக்குமார் (37). அவர் சிதம்பரம் மேலரதவீதியில் உள்ள கண்ணதாசன் என்பவரது பூக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

News image
Updated On :4 அக்டோபர் 2014, 12:43 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் பூக்கடை தொழிலாளர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கீரனூரைச் சேர்ந்தவர் சிவக்குமார் (37). அவர் சிதம்பரம் மேலரதவீதியில் உள்ள கண்ணதாசன் என்பவரது பூக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சிதம்பரம் மந்தகரையில் உள்ள கடை உரிமையாளர் வீட்டில் தங்கி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு சாப்பிட்டு விட்டு தான் தங்கியிருந்த அறையில் பிளாஸ்டிக் நாடாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கண்ணதாசன் சிதம்பரம் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.