ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மதுவிலக்கு பேராட்டம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் முழு அடைப்பிற்கு ஆதரவு இல்லை

மதுவிற்கு எதிராக சில கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த கடையடைப்பு போராட்டத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் ஆதரவு இல்லை.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2015, 12:33 pm

கோ.ஜெயக்குமார்

மதுவிற்கு எதிராக சில கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த கடையடைப்பு போராட்டத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் ஆதரவு இல்லை.

வழக்கம்போல் அனைத்து கடைகளும் திறந்திருந்தன. அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம் போல இயங்கின.

கைது: ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் பா.புனிதன் (53), மாவட்ட துணைச் செயலாளர் மா.வைரமுத்து (35) ஆகியோரை நகர் காவல் ஆய்வாளர் சுந்தரபாண்டியன் கைது செய்தார்.

மல்லியில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற மதிமுக மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சீ.முருகன் (42), இணைச் செயலாளர் ச.ஸ்ரீதர் (42) ஆகியோரை சார்பு ஆய்வாளர் மகேஸ்வரி கைது செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.