வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே தினமலர் பத்திரிக்கையின் நிருபர் அன்பு (42) மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
பணி முடிந்து புதன்கிழமை இரவு அன்பு, வீட்டுக்கு காரில் வந்து கொண்டிருந்த போது, கந்திலி என்ற பகுதியில், காரை வழி மறித்த மர்ம நபர்கள், அவர் மீது மிளகாய் பொடி தூவி, அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.