அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகர் பகுதியில் நடைபெற இருந்த 5 சிறுமிகளின் திருமணம் நிறுத்தம்: அதிகாரிகள் நடவடிக்கை

விருதுநகர் பகுதியில் நடைபெற இருந்த 5 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தி சமூக நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Updated On :27 ஆகஸ்ட் 2015, 2:36 pm

விருதுநகர் பகுதியில் நடைபெற இருந்த 5 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தி சமூக நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டப் பகுதிகளில் காரியாபட்டியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், சென்னையைச் சேர்ந்த மனமகன் பாண்டியராஜன்(25) ஆகியோருக்கு இண்று திருமணம் நிச்சயம் செய்திருந்தனர். அதேபோல், ராஜபாளையம் அருகே வேண்டு்ராயபுரம் 15 வயது சிறுமிக்கும், வெள்ளையாபுரத்தைச் சேர்ந்த ரெங்கசாமி(35) என்பவருக்கு 2-வது திருமணமும், திருச்சுழி அருகே இலுப்பையூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், சென்னையைச் சேர்ந்த சுரேஷ்(25), புளியங்குளத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும், கட்டனூர் பகுதியைச் சேர்ந்த தொண்டிக்கருப்பு(24), அருப்புக்கோட்டை அருகே வெள்ளைக்கோட்டையைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், பாளையம்பட்டியைச் சேர்ந்த தர்மராஜ்(25) ஆகியோருக்கும் திருமணம் செய்ய நிச்சயம் செய்து, அதற்கான அனைத்து ஏற்பாடுகளைௌயும் இருவீட்டார்களும் தயார் செய்து வைத்திருந்தனர்.

இது தொடர்பாக புதன்கிழமை இரவு ஆட்சியருக்கு சிறுமிகள் திருமணம் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் ரகசிய தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், குழந்தைகள் தடுப்பு காவல் துறையினர், சைல்டு லைன் அமைப்பினர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் பிரிந்து சென்று திருமணம் நிச்சயித்த இருவீட்டாரிடமும் வயது குறைந்த சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

அதனால், குறிப்பிட்ட வயதை அடைந்த பின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ள வலியுறுத்தினர். இதை மீறும் பட்சத்தில் காவல் துறை மூலம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து விளக்கமாக இருவீட்டாரிடமும் எடுத்துரைத்தனர். அதன் பின்னர் போலீஸார் பாதுகாப்புடன் சிறுமிகளை அழைத்து வந்து விருதுநகரில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.