அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகர் அருகே வாகனத்தில் கருந்திரிகளை கடத்தியதாக 2 பேர் கைது

விருதுநகர் அருகே அனுமதியின்றி வாகனத்தில் கருந்திரிகளை கடத்திச் சென்றதாக 2 பேரை வச்சக்காரப்பட்டி போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

Updated On :29 ஆகஸ்ட் 2015, 10:42 am

விருதுநகர் அருகே அனுமதியின்றி வாகனத்தில் கருந்திரிகளை கடத்திச் சென்றதாக 2 பேரை வச்சக்காரப்பட்டி போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

விருதுநகர் அருகே மத்தியசேனை-வச்சக்காரப்பட்டி சாலையில் பட்டாசு உற்பத்தி செய்ய பயன்படும் கருந்திரிகட்டுக்களை கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் காவல் சார்பு ஆய்வாளர் ஜெயராமன் தலைமையில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், சாக்கு பையில் 800 கருந்திரி கட்டுக்கள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை செய்ததில் சங்கரலிங்காபுரம் முனீஸ்வரன் காலனியைச் சேர்ந்த வேல்முருகன்(30) என்பது தெரியவந்தது.

அதேபோல், இதே சாலையில் சோரம்பட்டி அருகே வந்து கொண்டிருந்த வாகனத்தை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டதில், பொட்டலமாக 700 கருந்திரி கட்டுக்கள் இருந்தது. மேலும், விசாரித்ததில் கட்டனார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன்(35) என்பது தெரியவந்து. மேலும், இது குறித்து வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்தனர். அதோடு, அவர்களிடம் இருந்து 1500 கருந்திரி கட்டுக்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு அழிப்பதற்காக எடுத்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.