அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் கன மழை: 44 வீடுகள் சேதம்: விரைவாக நிரம்பும் 158 கண்மாய்கள்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் புதன்கிழமை இரவு முதல் பெய்த கன மழைக்கு 44 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக வட்டாட்சியர் அன்னம்மாள் கூறினார்

News image
Updated On :3 டிசம்பர் 2015, 3:12 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் புதன்கிழமை இரவு முதல் பெய்த கன மழைக்கு 44 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாயும், தாலுகாவில் உள்ள 158 கண்மாய்கள் விரைவாக நிரம்பி வருவதாயும் வட்டாட்சியர் அன்னம்மாள் கூறினார்.

வியாழக்கிழமை காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் 12 செ.மீ மழை பெய்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெய்த மழையை அடுத்து மொட்டப்பத்தான் கண்மாய் திறந்துவிடப்பட்டது. இதனையடுத்து வடமலைக்குறிச்சி ஓடை, ஓட்டமடம், மாலைப்பட்டி பகுதிகளில் ஆக்கிரமிப்பு மற்றும் தாழ்வான பகுதியில் இருந்த வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றத் தலைவி செந்தில்குமாரி முத்துராஜ், நகராட்சி ஆணையாளர் பழனிவேல், வட்டாட்சியர் அன்னம்மாள் ஆகியோர் சம்பவ பகுதிகளுக்கு உடனடியாகச் சென்று ஜே.சி.பி. இயந்திரங்கள் கொண்டு நீர் வரத்துப் பாதைகளில் உள்ள அடைப்புகளை சீர் செய்து நீர் சீராக செல்ல நடவடிக்கை எடுத்தனர். இதனால் 44 வீடுகளின் சுவர்கள் உள்ளிட்டவைகளில் சிறிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாயும், தாலுகாவில் உள்ள 158 கண்மாய்கள் விரைவாக நிரம்பி வருவதாயும் வட்டாட்சியர் கூறினார். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சுமார் 9 ஆண்டுகளுக்கு மேல் வறண்டு கிடந்த பெரியகுளம் கண்மாய்க்கு நீர் வந்து மடைகளின் வழியே வெளியே செல்கிறது. தொடர்ந்து இப் பகுதியில் மழை பெய்தால், அதனை மேற்கொள்வதற்கு வருவாய்த்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாய் அதிகாரிகள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.