மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பெண் யானை சாவு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் காட்டில் மின்சாரம் தாக்கியதில் பெண் யானை உயிரிழந்தது.

News image
Updated On :31 ஜனவரி 2015, 1:24 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் காட்டில் மின்சாரம் தாக்கியதில் பெண் யானை உயிரிழந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகம், கான்சாபுரம் பீட்-1, அத்திகோவிலில் காப்புக் காட்டை அடுத்து சுமார் அரை கி.மீ. தூரத்தில், ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான காடு உள்ளது. இந்தக் காட்டை ஒட்டி 11 கிலோ வாட் சக்தி கொண்ட மின்சார வயர் செல்கிறது. இங்குள்ள மூங்கிலை உடைப்பதற்காக, காப்புக் காட்டில் உள்ள 20-25 வயது மதிக்கத்தக்க பெண் யானை வியாழன் இரவு வந்துள்ளது. மூங்கிலை உடைக்கும் போது மின்சார வயரில் துதிக்கை பட்டுள்ளது. இதில் யானை உயிரிழந்தது.

இது குறித்து சனிக்கிழமை வனத்துறையினருக்கு தெரிய வந்துள்ளது.

மாவட்ட வன உயிரின காப்பாளர் அசோக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் சம்பவ  இடத்திற்குச் சென்று உயிரிழந்த யானையை பார்வையிட்டனர். மேலும் கால்நடை மருத்துவர்கள் குழு சம்பவ இடத்தில் யானையை பிரேத பரிசோதனை செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.