ராமேசுவரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலில் நீராட சென்று கடல் அலையில் சிக்கி தவிக்கும் போது அவர்களை மீட்பது குறித்து ராமேசுவரம் தீயணைப்பு வீரர்களுக்கு உயர் அதிகாரிகள் தனுஷ்கோடி கடல் பகுதியில் வியாழக்கிழமை பயிற்சி அளித்தனர்.
ராமேசுவரம் திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். இவர்கள் ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடல், தனுஷ்கோடி கடல், முந்தராயர் சத்திரம் கடல், அர்ச்சல்முனை பகுதி கடல் ஆகிய கடல் பகுதிகளில் நீராடி செல்கின்றனர். பக்தர்களும், சுற்றுலாவாசிகளும் சில நேரங்களில் கடலின் அலையின் வேகம் மற்றும் தன்மை தெரியாமல் கடல் அலையில் சிக்கிக் கொள்கின்றனர். அப்படி சிக்குபவர்களை மீட்பது எப்படி என்பது குறித்து ராமேசுவரம் தீயணைப்பு வீரர்களுக்கு முகுந்தராயர் சத்திரம் கடல் பகுதியில் தீயணைப்பு அலுவல நிலைய அலுவலர் கேசவதாசன் தலைமையில் சிறப்பு பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டன. இப்பயிற்ச்சியில் கடல் அலையில் சிக்குபவர்களை லைப்பாய், லைப்ஜாக்கட், ரோப் ஆகியவற்றை பயன் படுத்தி மீட்பது குறித்து தலைமை தீயணைப்பு வீரர் கந்தசாமி வீரர்களுக்கு சிறப்பு பயிற்ச்சி அளித்தார்.பயிற்ச்சியில் ராமேசுவரம் பகுதியியை சேர்ந்த ஐந்து தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சி குறித்து தீயணைப்பு அலுவல நிலைய அலுவலர் கேசவதாசன் கூறியது:
தீயணைப்பு விரர்களுக்கு குளம்,ஏரி,கால்வாய் ஆகிய பகுதிகளில் மட்டும் பயிற்ச்சி அளிக்கப்பட்டுள்ளது.அப்பகுதிகளில் ஏற்படும் விபத்துகளுக்கு மட்டும் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் முதன் முதலாக கடலில் சிக்கி தவிக்கும் பக்தர்கள், சுற்றுலாவாசிகளை மீட்பது எப்படி குறித்து வீரர்களுக்கு சிறப்பு பயிற்ச்சி அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சனந்த் நடிக்கும் ஹார்ட்டின் பட டிரைலர் வெளியீடு!

விஜய் அன்பளிப்பு! ரிக்ஷா தொழிலாளர்களுக்கு இலவச மழை கோட்டுகள்!

அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்குகிறாரா?

ரிலையன்ஸ் பங்குகள் 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவு!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK


