அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அரசு பேருந்தை வழி மறித்து தகராறு செய்து ஓட்டுநரை தாக்கிய இருவர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பேருந்தை, தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் முன்னாகச் சென்று வழி மறித்து வந்து, ஓட்டுநருடன் தகாறு செய்து அவரை தாக்கிய இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் மூவரைத் தேடி வருகிறார்கள்.

News image
Updated On :2 நவம்பர் 2015, 2:50 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பேருந்தை, தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் முன்னாகச் சென்று வழி மறித்து வந்து, ஓட்டுநருடன் தகாறு செய்து அவரை தாக்கிய இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் மூவரைத் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆயர்தர்மத்திற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை கான்சாபுரம், ஆர்.சி. தெருவைச் சேர்ந்த மு.சுந்தரமகாலிங்கம் (42) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

சீலநாயக்கன்பட்டி வழியே சென்று கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் மூவர் வந்துள்ளார்கள். இவர் தொடர்ந்து பேருந்தை முந்திச் சென்று, சாலையின் குறுக்கே இங்கும் அங்குமாக வண்டியை ஓட்டி, பேருந்து செல்லவிடாமல் தடுத்து வந்துள்ளனர். டாஸ்மாக் கடை அருகே வந்தபோது, ஓட்டுநர் சுந்தரமகாலிங்கம் பேருந்தை விட்டு இறங்கி மூவரிடமும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது மற்றொரு இரு சக்கர வாகனத்தில் அவ்வழியே வந்துவர்களும் சேர்ந்து ஓட்டுநரை ஆபாசமாகப் பேசி தாக்கி அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார்கள்.

இது குறித்து சுந்தரமகாலிங்கம், நத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில் வாகனத்தை ஓட்டி வந்த துலுக்கபட்டியைச் சேர்ந்த முத்துராஜ், மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் ஆகிய மூவரும் தப்பி ஓடிவிட்டார். பின்னால் அமர்ந்து வந்த துலுக்கபட்டி க.மலைச்சாமி (52), கல்யாணிபுரம் இ.முனியாண்டி (60) ஆகிய இருவரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய மூவரையும் போலீஸார் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.