அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மூதாட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நடத்திக் கூட்டிச் சென்ற ஆட்சித் தலைவர்

விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன், புகார் கொடுக்க வந்த மூதாட்டியை, தனது அலுவகத்திலிருந்து நடத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று திங்கள்கிழமை புகார் அளித்தது அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியது.

News image
Updated On :2 நவம்பர் 2015, 1:52 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன், புகார் கொடுக்க வந்த மூதாட்டியை, தனது அலுவகத்திலிருந்து நடத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று திங்கள்கிழமை புகார் அளித்தது அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிறைவடைந்து, ஆட்சித் தலைவர் கீழே இறங்கி வந்தார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர், லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த காளி என்பவரின் மனைவி ஜக்கம்மாள் என்ற மூதாட்டி தனது மகள் மற்றும் பேரக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார். அவரிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜாராமன் விவரம் கேட்டார். அப்போது அவர் கூறியதாவது: எங்களது ஊரில் 1.75 ஏக்கர் நிலம் எங்களுக்கு உண்டு. இதனை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் விற்க திட்டமிட்டு ரூ.10 லட்சம் கிரையம் பேசி, ரூ.1 லட்சம் முன்பணம் பெற்றோம். பின்னர் பத்திரப் பதிவிற்கு அந்த நபர் அழைத்துச் சென்றார். அங்கு பத்திரங்களில் கையொப்பம் கேட்டார். மீதி பணம் ரூ.9 லட்சத்தை விரைவில் தருவதாயும், ஆனால் பத்திரம் முடித்துத் தரவும் கூறினார். ஆனால் எனது கணவர் காளி கையொப்பமிட மறுத்துவிட்டு வந்துவிட்டார். சில நாட்களில் உடல் சுகவீனம் காரணமாக காளி இறந்துவிட்டார். இந்நிலையில் ரூ.1 லட்சத்தை முன்பணம் வாங்கிய நபரிடம் கொடுத்துவிட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டேன். ஆனால் அந்த நபர் மேலும் ரூ.35 ஆயிரம் செலவு செய்துவிட்டதாயும், அதனைக் கேட்டும் பல வகைகளில் தொல்லை கொடுத்து வருவதாய் கூறினார்.

இதனைக் கேட்ட மாவட்ட ஆட்சித் தலைவர், இவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நடத்தியே அழைத்துச் சென்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரனிடம் விவரத்தைக் கூறினார். அவர் உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு, இது விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

ஆட்சித் தலைவர் மூதாட்டியை நடத்தி அழைத்துச் சென்றதை, யாரோ செல்வதாக அப் பகுதியில் உள்ளவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். பின்னர் அது ஆட்சித் தலைவர் என்று அறிந்ததும், அவரது செயலை வெகுவாக பாராட்டினர். இது ஆட்சித் தலைவர் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தயது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.