அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

விருதுநகர் மாவட்டத்தில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக்கோரி மக்கள் நலக் கூட்டு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்டத்தில் 7 இடங்களில் மக்கள் நலக் கூட்டு இயக்கத்தினர் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

News image
Updated On :3 நவம்பர் 2015, 2:11 pm

கோ.ஜெயக்குமார்

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்டத்தில் 7 இடங்களில் மக்கள் நலக் கூட்டு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் முருகன் தலைமை வகித்தார். மதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலர் கண்ணன் அரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, ரேசன் கடைகளில் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அனைத்தையும் தட்டுப்பாடின்றி அரசு வழங்கக்கோரியும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதேபோன்று, அருப்புக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் காத்தமுத்து தலைமையிலும், காரியாபட்டியில் மதிமுக மாவட்டச் செயலர் சண்முசுந்தரம் தலைமையிலும், ராஜபாளையத்தில் முன்னாள் எம்.பி. லிங்கம் தலைமையிலும், சாத்தூரில் மதிமுக நகரச் செயலர் தங்கவேல் தலைமையிலும், ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் தி.ராமசாமி தலைமையிலும், சிவகாசியில் மதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஞானதாஸ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு கோஷமிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.