இதேபோன்று, அருப்புக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் காத்தமுத்து தலைமையிலும், காரியாபட்டியில் மதிமுக மாவட்டச் செயலர் சண்முசுந்தரம் தலைமையிலும், ராஜபாளையத்தில் முன்னாள் எம்.பி. லிங்கம் தலைமையிலும், சாத்தூரில் மதிமுக நகரச் செயலர் தங்கவேல் தலைமையிலும், ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் தி.ராமசாமி தலைமையிலும், சிவகாசியில் மதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஞானதாஸ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு கோஷமிட்டனர்.