தமிழக முதல்வர் ஜெயலலிதா, சிறுபான்மையின மக்களின் சமூகம், கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு செய்திடும் வகையில் சீரிய நோக்கில் சிறுபான்மையின சமுதாய மக்கள் பயன்பெறும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவர்கள் ஜெருசலேம், பெத்லகேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலியோ சமுத்திரம் உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்றுவர அரசு நிதியுதவி அளிக்கும் திட்டத்தின் மூலம் தலா ரூ.20 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு 500 பயனாளிகளுக்கு புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.