அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான அறிவியல் சோதனைகள் குறித்த பயிற்சி

ஸ்ரீவில்லிபுத்தூர்.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க நிலையில் பயிலும் குழந்தைகளுக்கு, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும்,

News image
Updated On :7 நவம்பர் 2015, 8:24 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர்.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க நிலையில் பயிலும் குழந்தைகளுக்கு, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், அறிவியல் கருத்துக்களைச் செயல்பாடுகள் மூலம் கற்கவும், ஆசிரியர்களுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டில், எளிய அறிவியல் சோதனைகள் மற்றும் செயல் திட்டங்கள் என்ற பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்திற்குட்பட்ட 11 குறுவளமையங்களில் நடைபெற்ற இப் பயிற்சியில் 391 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.சிவந்திபட்டி குறுவமையத்தில் ஆசிரியப் பயிற்றுநர் சுந்தரேஸ்வரி தலைமையில் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி தொடங்கி வைத்துப் பேசுகையில் கூறியதாவது:

இந்தப் பயிற்சி அறிவியல் கற்பித்தலின்போது, ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை களையக் கூடிய வகையில் ஒவ்வொரு செயல்பாடும் விளக்கமாக  அளிக்கப்படுகிறது. அறிவியல் சோதனைகளைச் செய்யும்போது, அச்சோதனைகளிலிருந்து மாணவர்கள் பெறும் அறிவியல் அறிவினை வலியுறுத்த வேண்டும்.

மாணவர்களின் அறிவியல் கற்கும் திறனை அதிகரித்து, அறிவியல் ஆர்வத்ததைத் தூண்டுவதுடன் வினாக்கள் கேட்டு உண்மைகளைக் கண்டறியும் திறனை வளர்க்க இயலுவதுடன், மாணவர்களின் ஆராயும் திறனை மேம்படுத்த இயலும்.அறிவியல் பூர்வமாகச் சிந்தித்தல், நடைமுறையில் நிகழும் நிகழ்வுகளை அறிவியல் உண்மைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தல். காரண காரியத்தைத் தொடர்பினைக் கண்டறிதல், எந்த ஒரு கருத்தையும் கேட்டு, அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அதனை ஆழ்ந்து பகுப்பாய்வு செய்து, சரியான முடிவுக்கு வருதல், வினாக்களை எழுப்பிச் சரியான விளக்கங்களைப் பெறுதல் ஆகிய திறன்களை மாணவர்களிடம் ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும் என்றார்

அவர்.பயிற்சியை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லூ.ஜான்சேவியர்ராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.