அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் 265 பேருக்கு தீபாவளி புத்தாடை

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் தீபாவளியை முன்னிட்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர் 265 பேருக்கு புத்தாடை வழங்கும் விழா நடைபெற்றது.

News image
Updated On :8 நவம்பர் 2015, 10:00 am

கோ.ஜெயக்குமார்

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் தீபாவளியை முன்னிட்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர் 265 பேருக்கு புத்தாடை வழங்கும் விழா நடைபெற்றது.

பாப்பையநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்ட அலுவலர் முனியசாமி தலைமை தாங்கினார். மக்கள் கல்வி நிறுவன திட்ட அலுவலர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை இசபெல்லா வரவேற்றார்.

மாணவ மாணவியருக்கு மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்படும் புத்தாடைகளை வழங்கி நிறுவனத்தின் இயக்குநர் இ.விஜயலட்சுமி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மகளிர் மற்றும் இளைஞர்களின் மேம்பாட்டிற்கு மக்கள் கல்வி நிறுவனம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி பயிற்சி அளித்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் ஏராளமான பெண்கள் சுய தொழில் செய்து தங்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்கி வருவதாய் கூறினார். மேலும் மாணவர்கள் நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் சிறந்த குடிமக்களாக திகழ ஒழுக்கம், கட்டுப்பாடு, பெரியோரை மதித்தல் உள்ளிட்ட நற்பண்புகளை சிறு வயதிலேயே வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.