அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு சமுதாயத்தினரிடையே மோதல்: 2 பேர் கைது

News image
Updated On :11 நவம்பர் 2015, 10:10 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக மாற்றுச் சமுதாயத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மற்றும் பிளஸ் 2 மாணவரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லியைச் சேர்ந்த சிலர் மல்லி-பாட்டக்குளம் சாலையில் செவ்வாய்கிழமை இரவு பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே மேட்டு முள்ளிகுளத்தைச் சேர்ந்த மற்றொரு தரப்பைச் சேர்ந்த கருப்பசாமி, ராமநாதன் ஆகிய இருவர் சைக்கிளில் வந்துள்ளார்கள்.

அப்போது பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தவர்கள், சைக்கிளிலில் சென்வர்களை நில்லுங்கள் என்று கூறி, அவர்களை நிறுத்தி தகராறில் ஈடுபட்டார்களாம். இதில் ஏற்பட்ட மோதலில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தவர்கள் சைக்கிளில் வந்த இருவரையும் சாதியைக் கூறி இழிவாகப் பேசி தாக்கியுள்ளார்கள். இதில் காயமுற்ற இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து ராமநாதன், மல்லி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பொறியியல் மெக்கானிக்கல் முடித்துள்ள கார்த்திக், பிளஸ் 2 மாணவர் பிரசன்னகுமார் ஆகிய இருவரைக் கைது செய்தனர்.

மேலும் சந்துரு, முத்துக்குமார், பிரியதர்ஷன், ராம்குமார், செல்வம் ஆகிய 5 பேரைத் தேடி வருகிறார்கள். இப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.