அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் விமானம்: ரூ.25 கோடியில் தங்கத் தகடு பதிக்கும் பணி தொடக்கம்

கோ.ஜெயக்குமார், ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவில் கும்பாபிஷேகம்

News image
Updated On :18 நவம்பர் 2015, 9:54 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவில் கும்பாபிஷேகம் 2016 ஜனவரி 20-ம் தேதி நடைபெறுவதையொட்டி, கோவில் விமானத்தில் உள்ள சிற்பங்களுக்கு புதன்கிழமை தங்கத் தகடும் பணி தொடங்கியது.

ஆண்டாள் கோவிலுக்கு 10.2.2000 ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது ராம்கோ தொழில் குழுமத் தலைவரும் ஸ்ரீஆண்டாள் சாரிட்டபிள் டிரஸ்ட் தலைவருமான பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா மற்றும் தக்கார் கி.ரவிச்சந்திரன் ஆகியோரின் முயற்சியால் திருப்பணிகள் நடைபெற்று 2016 ஜனவரி 20-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கோவிலுடன் இணைந்த வடபத்ர சயனர் திருக்கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று 22.5.2015-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்நிலையில் கோவில் விமானத்தில் உபயதாரர் மூலம் 70 கிலோ தங்கம் (ரூ.25 கோடி மதிப்பில்) பெறப்பட்டு, சிற்பங்களுக்கு தங்கத் தகடு பொறுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி சிற்பங்களுக்கான தங்கத் தகடு செய்யும் பணி இரவு பகலாக நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது.புதன்கிழமை விமானத்தில் உள்ள சிற்பங்களுக்கு தங்கத்தகடு பொறுத்தும் பணியை தக்கார் கி.ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மனவாள மாமுனிகள் சன்னதி ஜியர், மதுரை கூடழகர்கோவில் உதவி ஆணையர் மற்றும் நகை சரிபார்க்கும் அலுவலர் அனிதா, உதவி ஆணையர் ஹரிஹரன், கோவில் திருப்பணிகள் பொறுப்பு அலுவலர் காளியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தங்கத் தகடு பொறுத்தும் பணி மற்றும் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் 2016 ஜனவரி 20-ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் சாரிட்டபிள் டிரஸ்ட் தலைவர் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா, தக்கார் கி.ரவிச்சந்திரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.