நீர் சுழற்சியில் சிக்கிய பொறியியல் மாணவர் சடலம் 5 நாட்களுக்கு பின்னர் மீட்பு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தின் நீர் சுழற்சியில் சிக்கிய பொறியியல் மாணவரின் சடலம் 5 நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளது.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தின் நீர் சுழற்சியில் சிக்கிய பொறியியல் மாணவரின் சடலம் 5 நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளது.
மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பழனிச்சாமி நாடார். இவரது ஒரே மகன் சந்தோஷ்குமார் (19). இவர் கோயமுத்தூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த அவர் வியாழக்கிழமை நண்பர்களுடன் செண்பகத்தோப்பு பேயனாற்று ஓடையில் வந்த காட்டாற்று வெள்ள நீரில் குளித்துள்ளார்.
அப்போது ஏற்பட்ட நீர் சுழற்சியில் சிக்கிய சந்தோஷ்குமரின் சடலம் திங்கள்கிழமை பேயனாற்று ஓடையில் விழுந்து கிடந்த ஒரு மரத்தின் அடியில் மீட்கப்பட்டது. மம்சாபுரம் போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...