கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்லூரி மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்லூரி மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கீழபொட்டல்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியன் மகள் கனகலட்சுமி (20). இவர் சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பி.எஸ்ஸி., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது செமஸ்டர் தேர்வுக்கு படிப்பதற்காக கல்லூரிக்கு விடுமுறை.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் கனகலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வன்னியம்பட்டி போலீஸார் விரைந்து சென்று கனகலட்சுமியின் சடலத்தைக் கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...