புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

போலி நிதி நிறுவனங்களை கண்டறிவது எப்படி? துண்டுப் பிரசுரம் விநியோகித்த போலிஸார்

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில், போலி நிதி நிறுவனங்கள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களைப் போலீஸார் விநியோகித்தனர்.

News image
Updated On :31 அக்டோபர் 2015, 10:17 am

சரவண பெருமாள்

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில், போலி நிதி நிறுவனங்கள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களைப் போலீஸார் விநியோகித்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு, திருவண்ணாமலை வணிக குற்ற புலனாய்வுப் பிரிவு இணைந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தன.

வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் பி.மனோகரன் தலைமையில், உதவி ஆய்வாளர் பி.மனோன்மணி, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் அசோகன், செல்வகுமார், மனோகரன் ஆகியோர் பொதுமக்கள், பேருந்து பயணிகளிடையே துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.

துண்டுப் பிரசுரங்களில், போலி நிதி நிறுவனங்களை கண்டறிவது எப்படி, முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்வது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.