அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இளம் பெண்ணிடம் மிளகாய் பொடி தூவி தாலி செயின் பறிப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பகலில் இளம் பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடியைத் தூவி அவர் அணிந்திருந்த தாலி செயினை

News image
Updated On :31 அக்டோபர் 2015, 12:25 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பகலில் இளம் பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடியைத் தூவி அவர் அணிந்திருந்த தாலி செயினை பறித்துச் சென்ற இரு இளைஞர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கலங்காபேரிபுதூரைச் சேர்ந்தவர் முருகன் மனைவி லில்லி (35). முருகன் துபாயில் வேலை செய்து வருகிறார். லில்லி முத்துலிங்காபுரம் கண்மாய் தேசிய ஊரக 100 நாள் வேலை திட்டத்தில் கணக்கராக வேலை செய்து வருகிறார். மாலை வேலை முடித்து சைக்கிளில் ஊருக்கு வன்னியம்பட்டி விலக்கு - சத்திரப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது விநாயகா பாலி பிளாஸ்கர் கம்பெனி அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 30-35 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்கள் லில்லியை வழிமறித்து, மிளகாய் பொடியை கண்ணில் தூவி அவர் அணிந்திருந்த 2 பவுன் எடையுள்ள தங்க தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்களாம்.

இது குறித்து லில்லி, வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட இருவரையும் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.