அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகரில் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் அன்றாட பணிகள் பாதிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் வேலை நிறுத்தப்போராட்டத்தில்  ஈடுபட்டதை தொடர்ந்து அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், பொதுமகக்ளுக்கான அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன.

Updated On :2 செப்டம்பர் 2015, 2:28 pm

விருதுநகர் மாவட்டத்தில் வேலை நிறுத்தப்போராட்டத்தில்  ஈடுபட்டதை தொடர்ந்து அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், பொதுமகக்ளுக்கான அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன.

விருதுநகர் மாவட்டத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வணிகவரித்துறை, நகராட்சி, பேரூராட்சி, சுகாதாரத்துறை, சத்துணவு மற்றும் அங்கன்வாடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 6560 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த 79 சதவீதம் பேர் வேலை நிறுத்தப்போராட்த்தில் ஈடுபட்டனர். இதில், 21 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர்.

இதனால் வருவாய் துறை மூலம் உதவித் தொகை மனுக்கள், வருவாய் சான்றிதழ் மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், பசுமை குடியிருப்பு திட்டங்களில் காசோலை வழங்குதல் மற்றும் கிராமங்களில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளுக்கான மேற்பார்வை செய்தல் ஆகிய பணிகள் பாதிக்கப்பட்டன. இப்போராட்டத்தினால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பல்வேறு துறைகளின் அறை வளாகங்கள் அலுவலர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.