பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி விருதுநகர் அருகே திருச்சுழியில் த.மா.கா சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் இன்று தொடங்கி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு த.மா.காவின் விருதுநகர் வடக்கு மாவட்ட தலைவர் க.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். முன்னாள் மக்களவை உறுப்பினர் உடையப்பன் முன்னிலை வகித்தார். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டியன் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். அதற்கு முன்னதாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து ஊர்வலமாக சென்று பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடம் கையெழுத்து பெற்றனர்.
இதேபோல், திருச்சுழி அம்பேத்கார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணிச்செயலாளர் உலக்குடி செல்வம், சிவகாசி எம்.கே.ராஜன், தெற்குமாவட்ட மகளிர் அணி தலைவர் வசந்தி மற்றும் மாவட்ட, வட்டார நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார தலைவர்கள் சங்கர்போஸ், துரைப்பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்தியாவின் முதல் விண்வெளிப் பயணம்

சமூக ஊடகம் மூலம் சிறுவனுடன் நட்பு: தப்பியோடிய சிறுமி மீட்பு

பிடிவாதம் தளர வேண்டும்!

எஸ்யூவி வாகனம் மோதி டாக்ஸி ஓட்டுநா் படுகாயம்! மேற்கு தில்லியில் சம்பவம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


