அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இளைஞர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசு இளைஞர் விருது பெற தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று தெரிவித்தது.

Updated On :5 செப்டம்பர் 2015, 10:03 am

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசு இளைஞர் விருது பெற தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று தெரிவித்தது.

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நல அலுவலர் (பொறுப்பு) முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி-12 சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பணிகளை அங்கிகரிக்கும் வகையில் மத்திய அரசு தேசிய இளைஞர் விருது வழங்கி வருகிறது.

இவ்விருதுக்கு 15 முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் இளைஞர்(தனிநபர்) தாங்கள் செய்த சமுதாயப் பணிகளை தன்னார்வ அடிப்படையில் நிதி ஆதாரம் பெறப்படாமல் செய்திருக்க வேண்டும். இதற்கு முன்பு இவ்விருது பெற்றவர்கள், மத்திய மாநில பல்கலைக்கழகம் மற்றும் இதர அரசு நிறுவனங்களில் பணிபுரிகின்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டாம். ஆதாரங்களை புகைப்பட விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

அதேபோல், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்திருக்க வேண்டும். நிர்வாக அதிகாரிகங்கள் அமைப்பு விதிகளில் குறிப்பிட்டிருக்க வேண்டும். லாப நோக்கத்துடன் பணியாற்றிருக்க கூடாது. குறிப்பிட்ட சாதி அடிப்படையில் தொண்டாற்றிய நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டாம். தொண்டு பற்றிய செய்தி மற்றும் புகைப்படம் ஆகியவை இணைத்தனுப்ப வேண்டும். 

இதில் தேர்வு செய்யப்படும் 25 இளைஞர்களுக்கு தலா ரூ.40 ஆயிரம் ரொக்கம்    பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியது. அதேபோல், தேசிய அளவில்  தேர்வு செய்யப்படும் தொண்டு நிறுவனத்திற்கு ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்பட இருக்கிறது. அந்தந்த மாவட்ட விளையாட்டு அலுவலகம் மற்றும் இனையதளம் www.sdat.tn.govt.in முகவரியில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் செப்.5 ம் தேதி மாலைக்குள் விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்துக்கு நேரில் வந்து கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.