சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் இன்று மாலையில் இடிமின்னல் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டு ஒரு அறை சேதமடைந்தது.
சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டை அருகே கோமாளிபட்டி கிராமத்தில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 50-க்கும் மேற்பட்ட அறையில் 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அதேபோல், இன்று வழக்கமாக பணியில் ஈடுபட்டு மாலையில் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, மழை பெய்த போது இடிமின்னல் தாக்கியதில் மத்தாப்பூ தயார் செய்யும் அறையின் மீது விழுந்தது. அதில், ஏற்பட்ட தீ விபத்தில் தயார் செய்து வைத்திருந்த கம்பி மத்தாப்பூ பெட்டிகள் அனைத்தும் எரிந்து நாசமானது. அதோடு, அறையும் சேதமடைந்தது. இது தொடர்பாக வெம்பக்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீட்டிற்கு ஒரு சமூக நீதி கோகிலாமணி உருவாக திமுகவிற்கு வாக்களியுங்கள்: கமலஹாசன்
லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள்: காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பலத்த பாதுகாப்பு!

சட்டப்பேரவை தோ்தல்: வேலூா் மண்டலத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

